April 25, 2024

தமிழில்.காம்

இணைவோம் தாய் மொழயில்

நாவல் பழத்தின் மருத்துவ குணங்கள்:

10 min read
நாவல் பழம், Blue Berry, Sugar, Diabetes, Effective Medicine, ரத்தப்போக்கு, பேதி, தொண்டைப் புண் , தொண்டை அழற்சி
நாவல் பழம், Blue Berry, Sugar, Diabetes, Effective Medicine, ரத்தப்போக்கு, பேதி,   தொண்டைப் புண் , தொண்டை அழற்சி
நீரிழிவு நோய் :

நீரிழிவு நோயால் பலரும் பாதிக்கப்பட்டு அவதியுறுகிறார்கள் . இதை கட்டுப்படுத்த நாவல் பழத்தின் விதைகள் சிறந்த மருந்து . இதன் விதைகளை நிழலில் உலர்த்தி தூள் செய்து கொள்ள வேண்டும் . ஒரு கிராம் அளவு தூளை , காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வந்தால் போதும் . படிப்படியாக நீரிழிவு நோய் கட்டுப்படும் .

ரத்தப்போக்கு :

பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் குணமும் நாவலுக்கு உண்டு . இதற்காக , 10 சென்டி மீட்டர் நீளமும் , 5 சென்டி மீட்டர் அகலமும் கொண்ட முற்றிய நாவல் மரத்தின் பட்டைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் . இந்த பட்டையை நன்கு நசுக்கி , 1/2 லிட்டர் தண்ணீரில் இட்டு கொதிக்க வைக்க வெண்டும் . அந்த தண்ணீரை ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி , பின் ஆற வைத்து குடிக்க வேண்டும் . தினமும் இரண்டு வேளை வீதம் 10 நாட்கள் இவ்வாறு குடித்து வந்தால் பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்தலாம் .


சிறுநீர் எரிச்சல் :

சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும் . இன்னும் சிலர் சிறுநீர்க்கட்டால் அவதிப்படுவார்கள் . இப்படிப்பட்டவர்கள் , நாவல் பழங்களை பிழிந்து வடிகட்டிய சாற்றை 3 தேக்கரண்டி அளவு எடுத்துக்கொள்ள வேண்டும் . அதனுடன் , ஒரு தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து குடிக்க வேண்டும் . தினமும் காலை , மாலை ஆகிய இரு வேளைகள் வீதம் 2 நாட்களுக்கு சாப்பிட்டாலே போதும் . சிறுநீர் எரிச்சல் தீர்ந்து விடும் . நீர்க்கட்டும் பறந்தே போய்விடும் .

பேதி:





நாவல் மரத்தின் இலைக் கொழுந்தை நசுக்கி சாறு எடுத்து , ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட வேண்டும் . காலை , மாலை என இரு வேளை 3 நாட்களுக்கு தொடர்ந்து இவ்வாறு சாப்பிட்டு வந்தால் பேதியை கட்டுப்படுத்தலாம் .

தொண்டைப் புண் , தொண்டை அழற்சி :

10 சென்டிமீட்டர் நீளமும் , 5 சென்டிமீட்டர் அகலமும் கொண்ட முற்றிய நாவல் மரத்தின் பட்டையை சேகரித்துக் கொள்ள வேண்டும் . இதை 1/2 லிட்டர் தண்ணீரில் இட்டு கொதிக்க வைக்க வெண்டும் . கொதிக்கும் நீரை 1/4 லிட்டராக சுண்டக்காய்ச்சிய பின்னர் , பொறுத்துக் கொள்ளும் சூட்டில் வாய் கொப்பளித்து வர வேண்டும் . தொடர்ந்து ஓரிரு நாட்கள் இவ்வாறு செய்தால் தொண்டைப் புண் , தொண்டை அழற்சி குணமாகும் .

பிற பயன்கள் :

நாவல் பழத்திற்கு சிறுநீர் பெருக்கம் , பசியை தூண்டும் தன்மை உண்டு . மேலும் , நாக்கு மற்றும் பல் ஈறுகளை சுத்தம் செய்யும் தன்மையும் இதற்கு உண்டு .

தொடர்ந்து நாவல் பழங்கள் சாப்பிட்டு வந்தால் குடல் , இரைப்பை இதயத்தின் தசைகள் வலுவாகும் .

நாவல் பழச்சாற்றுக்கும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் குணம் உண்டு .

நாவல் மரத்தின் பட்டைக்கு நரம்பை பலப்படுத்தும் சக்தியும் , மூச்சுக்குழல் அழற்சி , காசநோய் , குடல் புண்கள் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை குணமாக்கும் சக்தியும் உண்டு .

இரத்தம் சுத்தப்படுத்துதலிலும் நாவல் முக்கிய இடம் பெறுகிறது .

Leave a Reply

Your email address will not be published.